ADDED : மார் 25, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு தேவஸ்தான பூந்தோட்டத்தில் காவடி அபிேஷகம், தொடர்ந்து காவடி, பால் குடம் வீதியுலா நடந்தது. இதையடுத்து சுப்ரமணியர், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இடும் பன் சுவாமிக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்துடன், சுவாமி வீதியுலா நடந்தது.

