/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகள் நீச்சல் சாகச பயணம்
/
மாற்றுத்திறனாளிகள் நீச்சல் சாகச பயணம்
ADDED : ஆக 12, 2024 05:18 AM

புதுச்சேரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் விளையாட்டு குழுவும் இணைந்து 15 மாற்றுத்திறனாளிகள் ராமேஸ்வரம் மண்டபம், மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து சென்னை மெரினா வரை நீச்சல் சாகச பயணத்தை கடந்த 5ம் தேதி தொடங்கினர்.
அவர்கள் நேற்று மாலை 6:00 மணிக்கு புதுச்சேரி வந்தனர். அவர்களுக்கு புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, சம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் உட்பட பலர் மாற்றுத்திறனாளிகளை பாராட்டினர்.
அவர்கள் இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மரக்காணம், மகாபலிபுரம் வழியாக சென்னை மெரினா கடற்கரையை வருகிற 15ம் தேதி சென்றடைய திட்டமிட்டு உள்ளனர்.

