ADDED : ஆக 04, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் சாலையில் நடந்து சென்ற நபர் கிரேன் மோதி இறந்தார்.
காரைக்கால், திருநள்ளாறு பிரதான சாலையில் நேற்று திருவாரூர் பேரளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், 65, என்பவர் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த கிரேன் மோதி செல்வராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார், கிரேன் டிரைவர் தரங்கம்பாடி திருநாவுக்கரசு என்பவர் மீது வழக்குப் பதிந்து, கிரேனை பறிமுதல் செய்தனர்.
