/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷன்களில் நாளை மக்கள் மன்றம்
/
போலீஸ் ஸ்டேஷன்களில் நாளை மக்கள் மன்றம்
ADDED : மார் 14, 2025 04:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள போலீஸ் மற்றும் சைபர் கிரைம் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நாளை (15ம் தேதி) நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் மற்றும் சைபர் ஸ்டேஷன்களில் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை (15ம் தேதி) காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்படி, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். இதேபோல், முத்தியால்பேட்டை, மங்கலம், தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனிலும் மக்கள் மன்றம் நாளை நடக்கிறது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு போலீஸ், சைபர் கிரைம் சம்மந்தமான குறைகள் மற்றும் ஆலோசனைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.