/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்
/
பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்
பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்
பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது புதுச்சேரியில் 7,063 பேர் எழுதினர்
ADDED : மார் 04, 2025 04:27 AM

புதுச்சேரி: தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கியது.
புதுச்சேரியில் பகுதிகளில் 20 மையங்களிலும், காரைக்காலில் 5 மையங்களிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. காலை 10:00 மணிக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது.
வினாத்தாள் படிக்க 10 நிமிடம், 5 நிமிடம் விடைத்தாள்களில் தங்களது குறிப்புகளை எழுத என, 15 நிமிடங்கள் ஒதுக்கப்ட்டது.
பின் 10:15 மணியளவில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்னர். மதியம் 1:15 மணிக்கு தேர்வு முடிந்தது. முதல் நாளான நேற்று தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப்பாடங்களை மாணவர்கள் எழுதினர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் தமிழ்-6,959, சமஸ்கிருதம்-1, பிரெஞ்சு-1955, ஹிந்தி-49 பேர் தேர்வு எழுதினர். மொழிப்பாடங்களில் 32 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். பிளஸ் 2 தனித் தேர்வர்களை பொருத்தவரை தமிழ்-129, சமஸ்கிருதம்-1, பிரெஞ்சு-3, ஹிந்தி-1, அரபிக்-4 என 138 பேர் தேர்வு எழுதினர். 13 பேர் தேர்வுக்கு வரவில்லை. வரும் 25ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கிறது.
தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.