/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஏப் 03, 2024 07:26 AM
திண்டிவனம : சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் பாலமுருகன், 18; ஐ.டி.ஐ., படித் துள்ளார். இவர், 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி, அந்த சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில், சிறுமி கர்ப்பமாக இருந்து தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், ் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அதில், சிறுமியை கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பாலமுருகன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில், பாலமுருகன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

