ADDED : ஜூன் 26, 2024 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : திருக்கனுார் அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் தமிழக பகுதியை சேர்ந்த செல்வம், 60; என்பவர், மயங்கி கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மண்ணாடிப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.