sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கருவடிக்குப்பத்தில் போலீஸ் விசாரணை

/

கருவடிக்குப்பத்தில் போலீஸ் விசாரணை

கருவடிக்குப்பத்தில் போலீஸ் விசாரணை

கருவடிக்குப்பத்தில் போலீஸ் விசாரணை


ADDED : மே 27, 2024 05:07 AM

Google News

ADDED : மே 27, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சண்முகா நகரில் குடியிருப்புகள் முன்பு மதுபானம் குடித்து ரகளை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கருவடிக்குப்பம் சண்முகா நகர் பகுதியில் ஏராள மான குடியிருப்புகள் உள்ளது. இங்கு, இரவு நேரத்தில் வரும் மர்ம நபர்கள் வீடுகளின் முன்பு அமர்ந்து மதுபானம் குடிப்பதும், குடிபோதையில் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மது அருந்திய நபர்களை அப்பகுதி குடியிருப்புவாசிகள் தட்டி கேட்டனர். அதற்கு, மர்ம நபர்கள் ஆபாசமாக பேசியதுடன், மிரட்டல் விடுத்து சென்றனர். இது தொடர்பாக குடியிருப்புவாசிகள் லாஸ்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சண்முகா நகர் பகுதியில் தினசரி ரோந்து செல்ல தனி பீட் ஏற்பாடு செய்து கொடுப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பொது இடத்தில் மதுபானம் குடித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us