/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
/
இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 13, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நேரு வீதி - பாரதி வீதி சந்திப்பில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 10ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை.
இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

