sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் போலீஸ் சோதனை

தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் போலீஸ் சோதனை

தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் போலீஸ் சோதனை


ADDED : ஜூன் 04, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2024 05:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரியில் பார்சல் சர்வீஸ் மூலம் போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்காக ஆபரேஷன் திரிசூல் மூலம் புதுச்சேரி போலீசார் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பல்வேறு கடைகளில் அவ்வப்போது சோதனைகளை மேற்கொண்டு கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள பார்சல் நிறுவனத்தின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார், மோப்பநாய் பைரவா உதவியுடன் 100 அடி சாலையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பார்சல்களையும், டெலிவரி செய்ய வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் ஒவ்வொன்றாக சோதனை மேற்கொண்டனர். மேலும், சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஊழியர்களிடம் அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us