நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பெருமாளுக்கு மகா தீபாரதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சொரப்பூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

