நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணு பதி புண்ணிய காலம் முன்னிட்டு அதிகாலை காலை 8 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு மகா தீபாரதனையும், பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.