ADDED : மே 06, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு, வேதாம்பிகையம்மன், மூலநாதர், பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
கோவில் கொடிமரம் எதிரே, அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.