ADDED : ஜூலை 04, 2024 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது.
பாகூரில் வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 9.00 மணிக்கு, வேதாம்பிகையம்மன், மூலநாதர், பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
செல்வநந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கர்கள் தரிசனம் செய்தனர்.