ADDED : செப் 01, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சாரத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இக்கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து நந்தியம் பகவானுக்கு அபிேஷகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன்நீலகண்டன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.