ADDED : ஜூலை 30, 2026 11:54 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் முன் அறிவிப்பின்றி 3 அஞ்சலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க கோட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரியில் பாண்டிச்சேரி பஜார் துணை அஞ்சலகம், உழவர்கரை கிளை அஞ்சலகம் மற்றும் காலாப்பட்டு கிளை அஞ்சலகம் ஆகியவை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அஞ்சல் சேவைகளை சுருக்கும் கொள்கையை கைவிட்டு, மக்களுக்கு பயனுள்ள சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்.
ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்காமல் எந்தவொரு நிர்வாக மறுசீரமைப்பையும் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
