
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை, பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்வு நடந்தது.
நிகழ்ச்சியில், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் 45 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் சிவக்குமார், விரிவுரையாளர் சினையா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.