ADDED : ஆக 20, 2024 05:08 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளுவர் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நேரு எம்.எல்.ஏ., பிளஸ் 1 பயிலும் 307 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலக ஊழியர்கள், மனித நேய மக்கள் சேவை இயக்க ராமலிங்கம், குணசேகரன், கைலாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
