ADDED : ஆக 23, 2024 06:35 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தவளகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்டாப், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் பிரேமானந்தன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வெங்கடேஸ்வர் முன்னிலை வகித்தார். வேதியியல் விரிவுரையாளர் நாராயணன் வரவேற்றார்.
சபாநாயகர் செல்வம் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் வழங்கி, பேசினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
தமிழ் ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.
