/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக கொலை வழக்கில் புதுச்சேரி குற்றவாளி சரண்
/
தமிழக கொலை வழக்கில் புதுச்சேரி குற்றவாளி சரண்
ADDED : மே 10, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: :புதுச்சேரி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் திருவையாறு கோர்ட்டில் சரணடைந்தார்.
புதுச்சேரி, வானரபேட்டையில் கடந்த 2022ம் ஆண்டு பிரபல ரவுடி பாம் ரவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்தனர். தலைமறைவான புதுச்சேரியை சேர்ந்த தேவேந்திரன்,26; என்பவரை கடந்த 2 ஆண்டாக தேடிவந்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீஸ் சரகத்தில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த தேவேந்திரன், திருவையாறு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று காலை சரணடைந்தார்.