sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ.200 கோடி 'ஆட்டை' வடமாநில வாலிபர்களை சுற்றிவளைத்த புதுச்சேரி போலீஸ்

/

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ.200 கோடி 'ஆட்டை' வடமாநில வாலிபர்களை சுற்றிவளைத்த புதுச்சேரி போலீஸ்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ.200 கோடி 'ஆட்டை' வடமாநில வாலிபர்களை சுற்றிவளைத்த புதுச்சேரி போலீஸ்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ.200 கோடி 'ஆட்டை' வடமாநில வாலிபர்களை சுற்றிவளைத்த புதுச்சேரி போலீஸ்


ADDED : ஆக 03, 2024 08:06 PM

Google News

ADDED : ஆக 03, 2024 08:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். பேஸ்புக் பக்கத்தில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, தனியார் ஏஜென்சி அதிகாரி என, தன்னை அறிமுகப்படுத்தி பேசிய நபர், கனடாவில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

விசா, மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் எடுப்பதற்கு பணம் டிபாசிட் செய்ய கூறியுள்ளார். நம்பிய சுரேஷ்குமார், அந்நபர் கூறிய வங்கி கணக்கில், 17.71 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தார். வேலை வாங்கி தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்குமார், மார்ச் 22ல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இரு மாதங்களாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ்குமாரை ஏமாற்றியது உத்தரபிரதேசத்தை சேர்ந்த கும்பல் என்பதும், பெங்களூருவில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

தனிப்படை போலீசார் பெங்களூருவில் மோசடி கும்பல் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அவர்கள், மத்திய பிரதேச மாநிலம், கோபால் பூராவை சேர்ந்த சுபம் ஷர்மா, 29, பீஹார், நவடா தீபக்குமார், 28, உத்தரபிரதேசம் பஸ்டி பகுதி ராஜ்கவுண்ட், 23, மத்திய பிரதேசம் கணேஷ்பூரா நீராஜ்குர்ஜார், 28, என, தெரியவந்தது.

விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, நாடு முழுதும், 3,400 பேரிடம் ஏமாற்றி, 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசாம்கான் தலைமையில் நால்வரும் தனிக்குழுக்களாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து, 21 மொபைல்போன்கள், இரு பாஸ்போர்ட், 42 சிம்கார்டு, 1 லேப்டாப், 64 ஏ.டி.எம்., கார்டுகள், 41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நால்வரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடகா, தமிழகம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டில்லி, அசாம் உள்ளிட்ட 9 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மோசடி கும்பலை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.

ரூ. ஒரு கோடிக்கு

அடுக்குமாடி வீடு புக்கிங்கைதாகியுள்ள நால்வரும், யாரை ஏமாற்ற வேண்டும்; எவ்வளவு பணம் ஏமாற்ற வேண்டும்; எந்த வங்கி கணக்கிற்கு பணம் பெற வேண்டும் என திட்டமிட்டு, அட்டவணை தயார் செய்து பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறு மோசடி செய்து அசாம்கானிடம் அளிக்கும் பணத்தில், 50 சதவீதம் கமிஷன் பணம் மட்டும் நால்வரும் பெற்று வந்துள்ளனர். இந்த பணத்தின் வாயிலாக 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், 1.16 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்து முன்பணமாக, 12 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.








      Dinamalar
      Follow us