ADDED : செப் 07, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் ஜெயமங்கள துார்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று மாலை 10:30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.