ADDED : ஆக 26, 2024 05:03 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு மாவட்ட காங்., சார்பில் ராஜ்பவன் தொகுதியில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் விழா மற்றும் இணைப்பு விழா, குருசுக்குப்பம் பகுதியில் நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வட்டாரத்தலைவர்கள் ராஜ்மோகன், ஜெரால்டு, மகிளா தலைவி பஞ்சகாந்தி, விஜயகுமாரி, மாநில செயலாளர் முத்துக்குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
