ADDED : ஏப் 18, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10:30 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு அனுமன் வாகனத்தில் ராமர் எழுந்தருளி வீதியுலா சென்று அருள்பாலித்தார். முன்னதாக காலை அனுமன், கருடாழ்வார் வாகனங்களின் கரிக்கோல வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

