/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறந்த விவகாரம் ஜிப்மரில் உறவினர்கள் முற்றுகை முயற்சி
/
கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறந்த விவகாரம் ஜிப்மரில் உறவினர்கள் முற்றுகை முயற்சி
கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறந்த விவகாரம் ஜிப்மரில் உறவினர்கள் முற்றுகை முயற்சி
கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறந்த விவகாரம் ஜிப்மரில் உறவினர்கள் முற்றுகை முயற்சி
ADDED : மே 15, 2024 11:50 PM
புதுச்சேரி: ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால், தவறான சிகிச்சை என கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வீராம்பட்டினம், ஓடை வீதியைச் சேர்ந்தவர் கலையரசன். ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா, 28; எட்டு மாத கர்பிணியான ஜெயசுதாவிற்கு கடந்த 13ம் தேதி மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ஜிப்மர் மகப்பெறு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மறுநாளான நேற்று முன்தினம் இரவு வயிற்றில் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின், வயிற்றில் இருந்த குழந்தை எடுக்கப்பட்டது.
இதை அறிந்த ஜெயசுதாவின் உறவினர்கள் டாக்டர்களிடம் விசாரித்தபோது, இறப்பிற்கான காரணம் சரியாக தெரிவிக்கவில்லை.
இதனால் நேற்று காலை, ஜிப்மர் மகப்பெறு மருத்துவமனை எதிரில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து கூடினர். அவர்களை கோரிமேடு போலீசார், மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு சீனியர் டாக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும். அதற்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, தெரிவித்தனர்.
அதை ஏற்று ஜெயசுதா உறவினர்கள் கலைந்து சென்றனர்.