sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த கோரிக்கை

/

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த கோரிக்கை

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த கோரிக்கை

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த கோரிக்கை


ADDED : பிப் 26, 2025 04:49 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென, முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சங்க தலைவர் மோகன் அறிக்கை:

புதுச்சேரியில் 1,600 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை மற்றும் அரசின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசின் உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை.

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கலெக்டர் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வு காணப்படுகிறது.

ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக குறை கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

கடந்தாண்டு சங்க ஆலோசகர் அசோக்பாபு எம்.எல்.ஏ., முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சரை சந்தித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த வேண்டுமென, கோரிக்கை வைத்தார்.

முதல்வர், இந்த கோரிக்கையை ஏற்று, முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டத்தினை, கலெக்டர் தலைமையில் உடனே கூட்டி, குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us