/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறைச்சிக்கு தயாரான கன்று கலெக்டர் முயற்சியால் மீட்பு
/
இறைச்சிக்கு தயாரான கன்று கலெக்டர் முயற்சியால் மீட்பு
இறைச்சிக்கு தயாரான கன்று கலெக்டர் முயற்சியால் மீட்பு
இறைச்சிக்கு தயாரான கன்று கலெக்டர் முயற்சியால் மீட்பு
ADDED : ஏப் 05, 2024 05:34 AM
புதுச்சேரி: இறைச்சிக்காக கொல்லப்பட இருந்த கன்று குட்டி மாவட்ட கலெக்டரின் முயற்சியால் மீட்கப்பட்டது.
புதுச்சேரி விழுப்புரம் சாலை, உழவர்கரையில் உள்ள இறைச்சி கடையில் நேற்று காலை கன்று குட்டியை, இறைச்சிக்காக வெட்டி கொல்வதற்கு கொண்டு வந்தனர்.
இதை பார்த்த வாய்ஸ் பார் வாய்லெஸ் அமைப்பினர், இறைச்சிக்காக கன்று குட்டிகள், கருவுற்ற கால்நடைகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள், அடிப்பட்ட மாடுகளை வெட்ட கூடாது என்பது சட்டம் உள்ளது என, கூறினர். அதை கடை உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.
இது தொடர்பான புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு கன்று குட்டியை ரெட்டியார்பாளையம் போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்பு, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் இறைச்சிக்காக கொல்லப்பட இருந்த கன்று குட்டியை மீட்டு சென்றது.

