sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்

/

மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்

மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்

மக்கள் நலன் காக்கும் அரசு அமைய இந்திய கம்யூ., தீர்மானம்


ADDED : ஜூலை 10, 2024 04:28 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவது என, இந்திய கம்யூ., கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்திய கம்யூ., கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம், முதலியார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அமுதா தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் சலீம், அரசியல் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில துணைச் செயலாளர் சேது செல்வம், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, மதியழகன், வழக்கறிஞர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், லோக்சபா தேர்தல் தோல்வியால் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு ஆட்டம் காண்கிறது. மூன்று ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாததால், மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டது.

ஆகையால், எதிர்காலத்தில் மக்கள் விரோத என்.ஆர்.காங்., அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராட வேண்டும்.

மக்களை பாதிக்கின்ற மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என போராடும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு கட்சியின் நிர்வாக குழு ஆதரவு தெரிவிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us