sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணின் கம்மலை பறித்த ரவுடி கைது

பெண்ணின் கம்மலை பறித்த ரவுடி கைது

பெண்ணின் கம்மலை பறித்த ரவுடி கைது


ADDED : மார் 04, 2025 09:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 09:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி, கம்மலை பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி திலகர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பழனி. இவரது மனைவி பரமேஸ்வரி, 48; இவர்களது பக்கத்து வீட்டில் வைத்திக்குப்பத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் ஏழுமலை (எ) மணிபாரதி. 20; தனது தாயுடன் கடந்த சில மாதத்திற்கு முன்பு குடிவந்தார். நேற்று முன்தினம் பரமேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் உள்ளே புகுந்த மணிபாரதி, பரமேஸ்வரியை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 கிராம் கம்மலை பறித்துச் சென்றார்.

பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து, மணிபாரதியை தேடி வந்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், லாஸ்பேட்டை நரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த மணிபாரதியை போலீசார் கைது செய்து கம்மலை பறிமுதல் செய்தனர். மணிபாரதி மீது ஏற்கனவே கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us