sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருபுவனை கூட்டுறவு வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

/

திருபுவனை கூட்டுறவு வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

திருபுவனை கூட்டுறவு வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

திருபுவனை கூட்டுறவு வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு


ADDED : மே 11, 2024 04:40 AM

Google News

ADDED : மே 11, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு வங்கியில்போலி ஆவணங்கள் சமர்பித்து ரூ.35 லட்சம் கடன் பெற்று மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி திருபுவனையில் இயங்கி வரும் விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கத்தின் வங்கி, மதகடிப்பட்டில் இயங்கி வருகிறது. இந்த சங்கம் மற்றும் வங்கி மூலம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இச்சங்கத்தின் உறுப்பினரான கலிதீர்த்தாள்குப்பம் முருகையன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கியின் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து தகவல் பெற்றார்.

அதில் விவசாயிகள் அல்லாத 50க்கும் மேற்பட்டோர் ரூ.35 லட்சம் கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. மனுவுடன் சமர்பித்த வருவாய் துறை ஆவணங்களை வில்லியனுார் தாசில்தார் அலுவலகத்தில் சரிபார்த்ததில் அவை போலி என்பது தெரிய வந்தது.

இது குறித்து முருகையன் கொடுத்த புகாரின்பேரில் கலிதீர்த்தாள்குப்பம் ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் நல்லுார் ஜெயக்குமார் ஆகியோர் மீது திருபுவனை போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us