sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்

/

விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்

விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்

விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்


ADDED : மே 09, 2024 04:32 AM

Google News

ADDED : மே 09, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ. 70 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டது.

முதலியார்பேட்டை சுந்தராஜ வீதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ், 43; ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிரைம் பிரிவு கான்ஸ்டபிள். இவரது மனைவி லதா. 15 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கடந்த ஆண்டு நவ. 28ம் தேதி நுாறடிச் சாலையில் பைக்கில் சென்ற அசோக்ராஜ், அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட் சாலை பிரிக்க அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

புதுச்சேரி போலீஸ்காரர்கள் சம்பளம், ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. போலீஸ் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும், தனிநபர் விபத்துக் காப்பீடு பலன் ரூ. 70 லட்சம் வழங்க புதுச்சேரி போலீசுக்கும், ஸ்டேட் வங்கிக்கும் இடையே கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதனை தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் அசோக்ராஜ் குடும்பத்திற்கு, இழப்பீடு தொகையாக ரூ. 70 லட்சம், அவரது மனைவி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அசோக்ராஜ் குடும்பத்தினர், டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து நன்றி கூறினர். சீனியர் எஸ்.பி. நாராசைதன்யா உடனிருந்தார்.

இந்த காப்பீடு பாதுகாப்பு மூலம் இனி வரும் காலங்களில் பணியில் இருக்கும் போலீசார் ஏதேனும் விபத்தில் இறந்தால் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் காப்பீடு தொகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us