sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

2 பேரிடம் ரூ.76 ஆயிரம் 'அபேஸ்'

/

2 பேரிடம் ரூ.76 ஆயிரம் 'அபேஸ்'

2 பேரிடம் ரூ.76 ஆயிரம் 'அபேஸ்'

2 பேரிடம் ரூ.76 ஆயிரம் 'அபேஸ்'


ADDED : மார் 22, 2024 05:44 AM

Google News

ADDED : மார் 22, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் கிரெடிட் கார்டில் சலுகை இருப்பதாக கூறி இருவரிடம் 76 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் குற்ற வாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த ரகு, 42; என்பவரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாகதன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அப்போது, வங்கி கிரெடிட் கார்டில் சலுகைகள் உள்ளது எனக் கூறி, அதற்கான கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு விபரங்களை கேட்டார்.

அதை நம்பி, அனைத்து விபரங்களையும் ரகு தெரிவித்தார். பின், மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை அந்த நபர்வாங்கினார்.

அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 42 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

அதே போல, புதுச்சேரியை சேர்ந்த லோகநாதன், 47; என்பவரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் வந்த லிங்கை கிளிக் செய்து, கிரெடிட் கார்டின் விபரங்களை லோகநாதன் பதிவு செய்தார். பின், மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்த அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்த 34 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

இது பற்றி, இருவரும் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us