/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காதலி இறந்த சோகம்; காதலன் தற்கொலை
/
காதலி இறந்த சோகம்; காதலன் தற்கொலை
ADDED : செப் 06, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காதலி இறந்த சோகத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ரவிக்குமார், 25; தனியார் விடுதி ஊழியர். இவர் காதலித்த பெண் இறந்ததால், மனஉளைச்சலில் இருந்து வந்த அவர், கடந்த மாதம் 2ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.