ADDED : ஜூன் 06, 2026 06:03 PM
உளுந்துார்பேட்டை: கிணற்றில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சந்துரு 13; இவர் உளுந்துார்பேட்டை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை, 6:00 மணியளவில் அதே பகுதி வயல்வெளியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது, தண்ணீரில் திடீரென சந்துரு மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் கிணற்றில் தேடிய போது, அவர் உயிரிழந்தது தெரிந்தது. தகவல் அறிந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஏடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
