ADDED : ஜூன் 14, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஸ்கூட்டர் மாயமானது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்தவர் சிவா, 48. இவர், தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை (பி.ஓய்.05 1468) கடந்த ஏப்ரல் 16ம் தேதி காலை ரெட்டியார் பாளையம் கம்பன் நகர், 5 வது குறுக்குத் தெரு அருகில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.
அன்று இரவு திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரை காணவில்லை. புகாரின் பேரில், ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
