/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கூட்டரில் சென்றவர் மரத்தில் மோதி பலி
/
ஸ்கூட்டரில் சென்றவர் மரத்தில் மோதி பலி
ADDED : பிப் 26, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: ஸ்கூட்டரில் சென்றவர் மரத்தில் மோதி உயிரிழந்தார்.
காரைக்கால், திருப்பட்டினம் மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் சவுரிராஜன் மகன் ராஜேந்திரன், 48; சமையலரான இவருக்கு, சுபாஷினி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, சமையல் வேலை முடித்துவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். திருப்பட்டினம் வீரப்பிள்ளை தெருவில் சென்றபோது, ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்ப மரத்தில் மோதியது. அதில், படுகாயமடைந்த, ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.