/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா
/
முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED : ஆக 10, 2024 04:56 AM
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம்-சொக்கம்பட்டு முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் - சொக்கம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தலாம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது.
அன்று காலை 10:00 மணிக்கு பூங்கரம் வீதியுலா, 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் செடல் அணிந்து, தேர், கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மாலை 5:00 மணிக்கு மனிதனுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.