ADDED : மே 27, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரியாங்குப்பம் அருகில், காக்காயன் தோப்பு, முத்து மாரியம்மன் கோவிலில் 80ம் ஆண்டு, செடல் திருவிழா, இன்று கொடியேற்றுத்துடன் துவங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் செடல் உற்சவம் வரும், 31ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு தேரோட்டமும், பகல் 12:00 மணிக்கு பால் சாகை வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு செடல் உற்சவம், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.
ஜூன் முதல் தேதி, காலை 8:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 6:00 மணிக்கு, தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வரும், 7ம் தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

