ADDED : மே 04, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புதுச்சேரி, பிரியதர்ஷினி நகர், கண்டக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வச்சலா, இவரது மகன் உதயகுமார், 24. இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை தாய் வச்சலா கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த உதயகுமார் கடந்த 1ம் தேதி மதியம் வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, உதயகுமாரை தேடி வருகின்றனர்.