ADDED : மார் 26, 2024 10:35 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தெற்காசிய நாடுகள் அமைதி நட்புறவு முகாமில் புதுச்சேரியை சேர்ந்தவர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நேபாள தலைநகர் காட்மண்டுவில் சமீபத்தில், தெற்காசிய நாடுகள் அமைதி நட்புறவு முகாம் நடந்தது. இதில் தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், இந்திய பிரதிநிதியாக புதுச்சேரியை சேர்ந்த ஆதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு நேபாள முன்னாள் அமைச்சரும், எம்.பி.,யுமான பிரகாஷ் சரண் மகத், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். முகாமில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
