/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்
/
சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்
ADDED : மே 18, 2024 06:33 AM
நெட்டப்பாக்கம் : ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது.
புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் அந்தந்த தாலுகா பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி வழங்க கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
அதன்படி, பாகூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. பாகூர் துணை தாசில்தார் ஷீலா ராணி தலைமை தாங்கி, முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் தனிக்குப்பம், நத்தமேடு, ஏம்பலம், செம்பியப்பாளையம் ஆகிய பகுதியில் இருந்து மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் பெற்று சென்றனர். நிகழ்ச்சியில் செம்பியப்பாளையாம், ஏம்பலம், நத்தமேடு வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.

