sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி

/

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி


ADDED : மே 31, 2024 02:28 AM

Google News

ADDED : மே 31, 2024 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில், அரிய ஆவண புகைப்பட சிறப்பு கண்காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் பிரான்சு நாட்டின் துணையுடன் இயங்கி வருகிறது. இந்தியாவியல், சமூக அறிவியல், தொல்லியல், சூழ்நிலையியல் ஆகிய துறைகளில் ஆய்வு செய்து வருகிறது.

இங்கு மூலிகை ஓவியங்கள், கோவில் நகைகள், ஓலைச்சுவடிகள் என, 1,35,629 ஒளிப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வைத்துள்ளனர். பழங்காலத்து ஓலைச் சுவடிகளை தனி நுாலகம் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இங்குள்ள அரிய புகைப்படங்களை தொகுத்து ஆவண கனவு உலகம் என்ற தலைப்பில் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

இதனை புகைப்பட கலைஞர் கார்த்திக்கு சுப்ரமணியன், மானிடவியல் ஆராய்ச்சியாளர் தேவரதி, வரலாற்று ஆய்வாளர் சுஜீத் ஆகியோர் ஒன்றிணைத்துள்ளனர்.

புகைப்பட கலைஞர் கார்த்திக் சுப்ரமணியன் கூறுகையில், பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியல் ரீதியாக அணுகி அதனை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவணங்களை கவித்துவ நோக்கில் அணுகி, அவற்றை தொகுத்து, புதிர்களுக்கு விடை தேட முயற்சித்துள்ளோம். இதில், எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us