ADDED : ஜூலை 14, 2024 06:10 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம், : நாணமேடு சுவர்ணா பைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி, இன்று சிறப்பு யாகம் நடக்கிறது.
தவளக்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சுவர்ணா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு யாகம் நடந்து வருகிறது.
இன்று வளர்பிறை அஷ்டமியையொட்டி, மாலை 3:00 மணிக்கு சிறப்பு யாகம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
