ADDED : மார் 22, 2024 10:33 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார் : பவுர்ணமியையொட்டி, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நாளை ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர்.
திருக்காமீஸ்வரர் கோவிலில் மாலை 5:00 மணியளவில் அபிேஷக ஆராதனை, 6:00 மணியளவில் ஆன்மிக நடைபயணம் துவங்குகிறது. வில்லியனுார் நான்கு மாட வீதிகள், வீர ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரர், மூலக்கடை பாடல் பெற்ற விநாயகர், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சித்தர் பீடம், ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக சென்று காசிவிஸ்வநாதர், திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் வழிபாடுடன், உறுவையாறு, கோட்டைமேடு, வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைகின்றனர்.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
