/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம்
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம்
ADDED : மார் 14, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று 38வது பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் சென்றனர்.
இதனையொட்டி, சுவாமிக்கு மாலை 6:00 மணியளவில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடையணம் மாட வீதிகள் வழியாக மூலக்கடை, சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, உறுவையாறு, ஆச்சார்யா புரம், கோட்டைமேடு வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
நடைபயணத்தில் புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், சிவாச்சார்யார்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.