/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
/
நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
ADDED : செப் 12, 2024 02:21 AM
நாகப்பட்டினம் : நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் நாகை மீனவர்களின் படகு கவிழ்ந்தது. ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய நான்கு மீனவர்களை, அவ்வழியே வந்த மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
நாகை மாவட்டம் செருதுாரை சேர்ந்த தர்மன்,55, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நான்கு மீனவர்கள் கடந்த 9ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு கிழக்கில் 30 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், மீனவர் படகு கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் நீரில் மூழ்கின.
கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு நான்கு மீனவர்களும் உயிருக்கு போராடினர். ஒரு மணி நேரத்திற்கு பின் அவ்வழியே வந்த மூன்று படகில் இருந்த மீனவர்கள், தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை காப்பாற்றி, கவிழ்ந்த படகையும் மீட்டு, நேற்று காலை கரை திரும்பினர்.
காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரித்து வருகின்றனர்.