/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
/
100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஏப் 13, 2024 04:41 AM

புதுச்சேரி: கவுண்டன் பாளையத்தில், 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி, கவுண்டன் பாளையம், முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் தேர்தல் கல்விக்குழு சார்பில், '100 சதவீத வாக்களிப்போம்' விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராசு, மாநில அள விலான நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார், பள்ளி அளவிலான நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந் தனர்.

