/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்
/
பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்
ADDED : ஏப் 19, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் ராம நவமி மகோற்சவ விழாவையொட்டி, ஊஞ்சல் உற்வசம் நடந்தது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை, சீனிவாச பொருமாள் கோவிலில், ராம நவமி மகோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. பெருமாள் சாமி, சூரிய பிரபை வாகனத்தில் உள்புறப்பாடு நடந்தது.
அதனை தொடர்ந்து, 16ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி, 17ம் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

