/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் சி.பி.எஸ்.இ., பள்ளி பொதுத் தேர்வில் சாதனை
/
தாகூர் சி.பி.எஸ்.இ., பள்ளி பொதுத் தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2024 01:48 AM

சேலம் : சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி தாகூர் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில், மாணவர் பார்த்தசாரதி 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், தீப்தி 479 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், கிருஷ்ண நாராயணசுவாமி 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.
வேதியியல் பாடத்தில் 5 பேர், பயாலஜி பாடத்தில் இருவர் 100க்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். 480க்கு மேல் ஒருவரும், 470க்கு மேல் 5 பேர், 460க்கு மேல் 11 பேர், 450க்கு மேல் 17 பேர், 400க்கு மேல் 44 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர் பவன் 485 மதிப்பெண் பெற்று முதலிடம், ரித்தீஷ் 484 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கீர்த்தனா 483 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பெற்றனர். தமிழ் பாடத்தில் 10 பேர், கணிதத்தில் 3 பேர், சோசியல் பாடத்தில் 2 பேர் 100க்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.
480க்கு மேல் 4 பேர், 470க்கு மேல் 10 பேர், 460க்கு மேல் 10 பேர், 450க்கு மேல் 18 பேர், 400க்கு மேல் 45 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை மாணவர்களை தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேல், செயலாளர் பரமசிவம், பொருளாளர் காளியண்ணன், நிர்வாகிகள் அருண்குமார், காளியப்பன், ராஜூ, சிலம்பரசன், கல்விக்குழு ஆலோசகர் பழனிவேல், ஆண்டவர் முத்துசாமி, பழனிவேல், மணிகண்டன், பள்ளி முதல்வர் கீதா உட்பட பலர் வாழ்த்தினர். ரீச் அகாடமி செந்தில், சுரேஷ், சிவநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

