/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சாராய கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
/
புதுச்சேரி சாராய கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
புதுச்சேரி சாராய கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
புதுச்சேரி சாராய கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
ADDED : ஜூலை 28, 2024 02:57 AM
புதுச்சேரி,:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக, மெத்தனால் விவகாரத்தில் புதுச்சேரி மற்றும் தமிழக போலீசாரிடையே உரசல் உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் தமிழக போலீசார் நடத்திய வாகன சோதனையில், சாராய பாக்கெட்கள் கொண்டு சென்ற நபர் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருபுவனை அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் சாராய பாக்கெட் வாங்கியதாக தெரிவித்தார். பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய புதுச்சேரியில் தடை செய்யப்பட்டுள்ளது. கலால் துறை வழங்கும் பாட்டில் மற்றும் கேன்களில் இருந்து சில்லரையாக விற்பனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழக போலீசார் ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் விசாரித்தபோது, 'எப்.ஐ.ஆர்., இன்றி ஏன் விசாரிக்கிறீர்கள்?' என, கேள்வி எழுப்பினர். இதனால் மீண்டும் வளவனுார் சென்ற போலீசார், கைது செய்யப்பட்டவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து வாக்குமூலம் பெற்றனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நேற்று காலை ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் சோதனை நடத்தி, அங்கிருந்த 40 பாக்கெட் சாராயம், பாக்கெட் போடும் மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சாராய விற்பனையாளர் பிரம்மநாதன், 45, என்பவரை கைது செய்தனர்.
தமிழக போலீசார், புதுச்சேரி சாராயக்கடைக்குள் புகுந்து சாராயம், மிஷின் பறிமுதல் செய்ததுடன், விற்பனையாளரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.